கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராம்குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பவானிசாகர் பகுதிக்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் ராம்குமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் அந்த பகுதி மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராம்குமாரை தேடி பார்த்தனர். நேற்று காலை 2-வது நாளாக ராம்குமார் தேடும் பணி நடைபெற்றது. அப்போது சத்தியமங்கலம் உக்கரம் பகுதியில் குப்பன் துறை அருகே ஒதுங்கி கிடந்த ராம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…