உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரயில் பாதையைக் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பைக் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. ஆரம்பத்தில் அவர் காயமின்றி தப்பித்தாலும், மோட்டார் சைக்கிளை மீட்டெடுக்கும் முயற்சியில் திரும்பி வந்தார்.
#ग्रेटर_नोएडा
बोडाकी रेलवे लाइन पार करते वक़्त बाइक अनियंत्रित होकर गिरी. युवक ने बाइक उठाने का प्रयास किया.. पीछे से आ रही तेज रफ्तार ट्रेन की चपेट में आने से युवक की मौत हो गई. 22 नवंबर को होनी थी युवक की शादी.. pic.twitter.com/0gi6Fddn1T— Pravendra Singh Sikarwar (@Pravendra_Sikar) October 13, 2025
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரது பைக்கை காப்பாற்ற முயற்சிக்கும்போது, எதிரே வந்த ஒரு ரயில் அவர் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளையும் ,அந்த இளைஞனையும் ரயில் இழுத்துச் சென்றது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3:00 மணியளவில் நடந்துள்ளது.
