கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஆன்லைன் கேம் விளையாடும்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் (21) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், மாணவியுடன் வீடியோ காலில் பேசி ஆபாசமாக உரையாடியதை ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மாணவியை மிரட்டி வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளி அஜய் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருப்பதை உறுதி செய்தனர். அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். விசாரணையில், மாணவியை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டியது உறுதியானதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆன்லைன் மூலம் சிறுமிகளை குறிவைத்து நடக்கும் இத்தகைய குற்றங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…