சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே வளர்ப்பு நாயை துப்பாக்கியாள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மனைவி மகேஸ்வரி. அவர் செங்கல் சூலையில் வேலை செய்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த நாய் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் வளர்த்து வந்த கோடிகளை சில நாட்களுக்கு முன்பு கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மகேஸ்வரி நாயை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் நந்தகுமார் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மகேஸ்வரியின் நாயை குறி வைத்து சுட்டுள்ளார்.
இதில் குண்டு பாய்ந்த நாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. தன்னுடைய கண் முன்பே வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி உடனே போலீசில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…