சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் விஜய் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் அடிக்கடி அருண் விஜயின் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது அருண் விஜய் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சிலர் நாட்களாக சோர்வாக இருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து விசாரித்த போது அருண் விஜயுடன் பழகியதை மாணவி கூறியுள்ளார். இது குறித்து காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…