திருவண்ணாமலை மாவட்டம் பேராயம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி கனிமொழி. நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அறிவழகன் அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் அறிவழகனின் வீட்டிற்கு வந்து மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மகேந்திரனை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மகேந்திரன் தனது சொந்த காரை மாத தவணைக்கு வாடகைக்கு விட்டு வந்தார். ஆனால் கார் வாங்கியதற்கான மாத தவணை தொகையை சரியாக செலுத்தாமல் இருந்துள்ளார். அதற்கு பணம் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவழகனின் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடியது தெரியவந்தது. இதனால் மகேந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்
