உண்டியலை உடைத்த வாலிபர்….! “கருவறையில் கேட்ட வினோத சத்தம்…” அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவில் மாவட்டத்தின் 12 பிரசித்தி சிவாலயங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

நவம்பர் 6 மாலை தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நடை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை பணம் திருடப்படவில்லை. மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

   

நேற்று காலை பம்மம் பகுதியில் சந்தேகமாக நின்ற வாலிபரை பார்த்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது வெள்ளாங்கோடு சரல்விளை மனோஜ் (29) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவரே உண்டியல் பூட்டை உடைத்தவர் என ஒப்புக்கொண்டார்.

   

இரவு மதில் ஏறி உள்ளே புகுந்த மனோஜ் இரும்புக் கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்தார். கருவறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் பயந்து பணத்தைத் திருடாமல் மனோஜ் தப்பி சென்றார்.  மது குடிக்க பணம் இல்லாததால் இச்செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.