மாடு மேய்க்கச் சென்ற 28 வயது இளம்பெண்… மாலை வீடு திரும்பாததால் தேடிச் சென்ற தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஒட்டுமொத்த ஊரையும் நடுங்க வைத்த சம்பவம்…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் சரகம் விளாபட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் கௌசல்யா (28). இவர்கள் வீட்டில் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் கால்நடைகளை வயல் பகுதியில் ஓட்டிச் சென்று வீட்டில் இருக்கும் கவுசல்யா மேய்த்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல நேற்று காலை வீட்டில் இருந்து ஆடு மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற கவுசல்யாவை மாலை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. மகள் வீடு திரும்பாததால் செல்வராஜ் தேடிச்சென்ற போது விளாபட்டி- பாக்குடி சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கௌசல்யா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

உடனே தகவல் அறிந்து போலீசாரும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு போலீசார் கௌசல்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கௌசல்யாவின் உடலில் வெளி காயங்கள் இல்லை என்றாலும் உயிருக்கு போராடிய நேரத்தில் பறித்த கையில் புல் செடிகள் இருந்தது. மேலும் நாக்கு சிறிது வெளியே வந்த நிலையிலும் இருந்துள்ளது. இளம் பெண் தனியாக இருப்பதை பார்த்து வெளிநவர்கள் வந்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

7 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

7 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

8 மணத்தியாலங்கள் ago