கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள பெலந்துறை என்ற கிராமத்தில் கனக துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 19 வயதில் அன்பரசி என்ற மகள் உள்ளார். அன்பரசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களது மகிழ்ச்சியை நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே செல்போன் தான். கடந்த சில நாட்களாக அன்பரசி வேறொருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அறிவழகன் அன்பரசியை கண்டித்துள்ளார்.
இருந்தாலும் அன்பரசி தொடர்ந்து செல்போனில் பேசியுள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி வீட்டில் இருந்து அன்பரசி அந்த நபருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியே சென்ற அறிவழகன் வீட்டிற்குள் வரும்போது மனைவி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் அன்பரசி தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறினார்.
மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த கணவர் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் சில இடங்களில் அவரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறிய அன்பரசி கோவையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…