தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பிரபல சமூக வலைதளப் பிரபலம் (Influencer), கடற்கரையில் தான் கடலுக்குள் செல்வதை வீடியோ எடுப்பதற்காகத் தனது செல்போனை மணலில் வைத்துவிட்டுச் சென்றபோது நிகழ்ந்த துயரம் இணையவாசிகளை உலுக்கியுள்ளது. அவர் உற்சாகமாகக் கடலுக்குள் இறங்கியபோது, எதிர்பாராத விதமாக உருவான மிக வலுவான கடல் நீரோட்டத்தில் (Rip current) சிக்கிக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ஒரு ராட்சத அலை அவரை இழுத்துச் செல்ல, தப்பிக்கப் போராடிய அவர் சில நொடிகளிலேயே கேமராவின் பார்வையிலிருந்து மறைந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
Una influencer tailandesa 🇹🇭 antes de meterse al mar, dejó su teléfono en la playa 🏖️ para grabar un video, pero se encontró con una fuerte corriente de alejamiento; desprevenida, fue arrastrada instantáneamente por una ola gigante y finalmente desapareció de la cámara. Un… pic.twitter.com/l0UZJyR16P
— 𝐈𝐧𝐞𝐬𝐃𝐞𝐥𝐀𝐥𝐦𝐚𝐌𝐢𝐚 (@InesBetancur1) April 13, 2026
அவர் மாயமான சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த வழியாகச் சென்ற ஒருவர் கடற்கரையில் அனாதையாகக் கிடந்த செல்போனை எடுத்துப் பார்த்தபோதுதான் இந்த நடுக்கம் தரும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது. தான் மகிழ்ச்சியாக இருக்கப் போகும் தருணத்தைப் படம்பிடிக்க நினைத்த அந்தப் பெண்ணின் கடைசி நிமிடக் காட்சிகளாக அது மாறிப்போனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், கடல் அலைகளின் ஆபத்து குறித்துப் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
