பெண்களே உஷார்..! இன்ஸ்டாகிராம் நண்பனை நம்பிச்சென்ற இளம்பெண்… “அய்யொ என்னை விட்டுருடா” ஹோட்டலில் நடந்த பயங்கரம்…!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணை, 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆன்லைனில் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் இருவரும் நேரில் சந்தித்தபோது, அந்த மாணவர் இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தச் சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.