“அண்ணா விட்டுடுங்க.. ப்ளீஸ்”…. வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்.. கதறக் கதற நடந்த கொடூரம்…. கோவையை உலுக்கிய பயங்கரம்…!

Spread the love

கோவையில் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை சக ஊழியர் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த மகேஷ் (32) என்பவர், கோவையின் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளிப் பெண்ணும் அவரது தாயாரும் வேலை பார்த்து வந்துள்ளனர். மகேஷிற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மகேஷ், தாகத்திற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இளம்பெண் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, மகேஷ் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் “அண்ணா, என்னை விட்டு விடுங்கள்” என்று கதறியும், அதைப் பொருட்படுத்தாமல் மகேஷ் இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம், பாதிக்கப்பட்ட இளம்பெண் அழுதுகொண்டே நடந்த கொடுமைகளைக் கூறியுள்ளார். “அவன் என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான்” என்று அந்தப் பெண் கதறியது காண்போரை கண்கலங்கச் செய்தது. இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக கோயம்புத்தூர் மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த மகேஷைத் தேடி வந்த காவல்துறையினர், இறுதியில் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு, தெரிந்த நபராலேயே இத்தகைய கொடுமை இழைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

6 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

6 மணத்தியாலங்கள் ago