உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலியின் வீட்டுப் பெட்டிக்குள் காதலன் சிக்கிக்கொண்ட வினோதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இந்த இளம் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தித் தனிமையில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை
, பெண்ணின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, அந்த இளம்பெண் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு தனிமையில் இருந்தபோது, அக்கம் பக்கத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகமே இந்தச் சம்பவத்தின் தொடக்கமாக அமைந்தது.
வீட்டில் விசித்திரமான சத்தங்கள் கேட்பதைக் கவனித்த அந்தப் பெண்ணின் அத்தை, ஒருவேளை திருடர்கள் புகுந்திருக்கலாம் என அச்சமடைந்தார். உடனே அவர் காவல்துறைக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதற்கிடையில், அத்தை கதவைத் தட்டியபோது அந்தப் பெண் சாமர்த்தியமாகப் பேசி அவரைத் திருப்பி அனுப்ப முயன்றார். ஆனால், அவரது பதிலில் திருப்தியடையாத அத்தை, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு உறவினர்களின் வருகைக்காகக் காத்திருந்தார்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் குடும்பத்தினர் வீட்டைச் சோதனையிட்டபோது, சுமார் 45 நிமிடங்கள் தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அறையில் இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவதை உறவினர்கள் கவனித்தனர். அந்தப் பெண் அந்தப் பெட்டியில் தனது உடைகள் இருப்பதாகக் கூறி சாவியைத் தர மறுத்தாலும், போலீசார் தலையிட்டு பெட்டியைத் திறந்தனர். உள்ளே அந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருப்பதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பெட்டிக்குள் சிக்கி சுயநினைவை இழக்கும் நிலைக்குச் சென்ற அந்த இளைஞரை மீட்க முயன்றபோது, ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அவரைத் தாக்க முற்பட்டனர். காவல்துறை உடனடியாகத் தலையிட்டு இளைஞரைப் பாதுகாப்பாக மீட்டதுடன், இருவரையும் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காதலித்த பெண்ணைப் பார்க்கச் சென்று, உயிருக்கே ஆபத்தான முறையில் பெட்டிக்குள் ஒளிந்திருந்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…