பீகார் மாநிலம் மோதிஹாரியில் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் வாழ்ந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. உஷா தேவி என்ற 25 வயதுப் பெண்ணிற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் சங்கீதா குமாரி என்பவர் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த சமயத்தில், மருத்துவர் எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை உஷாவின் வயிற்றிலேயே வைத்துத் தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற உஷா தேவிக்குத் தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பலமுறை உள்ளூர் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், அந்த கத்திரிக்கோல் மருத்துவர்களின் கண்ணில் படாததால் சாதாரண வலி என்று கூறி மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அண்மையில் வலி தாங்க முடியாமல் வேறொரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை அவசரமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அந்த கத்திரிக்கோல் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருந்ததால், அது குடலின் பல பகுதிகளைக் கிழித்து உடல் முழுவதும் கடுமையான கிருமித் தொற்றை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் தற்போது போராடி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…