“என் குழந்தையை பார்த்துக்கோங்க” நான் செத்துப்போறேன்… திருமண நாள் கொண்டாடிய 24 மணிநேரத்தில் இளம்பெண் தற்கொலை.. நடந்தது என்ன..? சிக்கிய உருக்கமான கடிதம்…!!

By Soundarya on பங்குனி 10, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், திருமணமான 24 மணி நேரத்திலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஷால் மற்றும் 23 வயதான பிரியங்கா தம்பதியினர், கடந்த சனிக்கிழமை தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை உறவினர்களுடன் மிக விமரிசையாகக் கொண்டாடினர். ஆனால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரியங்கா தனது அறையில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது ஒன்றரை மாதக் குழந்தை அழுத சத்தம் கேட்டு வந்த மைத்துனி, பிரியங்கா சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரியங்கா எழுதி வைத்திருந்த உருக்கமான தற்கொலைக் குறிப்பைக் கைப்பற்றினர். அதில், “என் அன்பு மகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்; எனக்கு எதுவும் புரியவில்லை. நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், இல்லையெனில் என் மகளை யார் கவனிப்பார்கள்? மகிழ்ச்சியாக வாழுங்கள் நண்பரே, விடைபெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அந்தக் கடிதத்தின் இறுதியில் அவர் “பாபுஜி” என்று குறிப்பிட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் முக்கியத் தடயமாகக் கருதப்படுகிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு குடும்பத்தில், தாயை இழந்த பச்சிளம் குழந்தையின் நிலை அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்துள்ளது.

   

இந்தத் தற்கொலை சம்பவம் தற்போது வரதட்சணை புகாராக உருவெடுத்துள்ளது. பிரியங்காவின் தாய் கீதா, தனது மகளை விஷால் பைக் மற்றும் தங்கச் சங்கிலி கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரே மகளைக் கொன்றுவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள கணவர் விஷால், பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மன உளைச்சலிலேயே அவர் இத்தகைய தீவிர முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரியங்காவின் மரணத்திற்கான உண்மைப் பின்னணியைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.