தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் தனியாகச் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் வம்பு இழுத்து, அநாகரிகமான முறையில் கண்ணடித்துள்ளார். இதனால் கடும் கோபமும் ஆவேசமும் அடைந்த அந்தப் பெண், சற்றும் பயப்படாமல் அந்த வாலிபரை நடுரோட்டிலேயே விரட்டி விரட்டித் தாக்கியுள்ளார். பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைப் புரட்டி எடுத்ததோடு மட்டுமல்லாமல், அடித்துக் கொண்டே இழுத்துச் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார்.
பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்குப் பயந்து ஒதுங்கிப் போகாமல், அந்த இளம்பெண் காட்டிய இந்த அதிரடித் துணிச்சல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. தவறு செய்த வாலிபருக்குத் தகுந்த பாடம் புகட்டிய அந்தப் பெண்ணின் தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…