வீட்டுக்குள் புகுந்த 20 வயது இளம்பெண்…! மூதாட்டியை அந்த கோலத்தில் கண்டு பதறிய குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த பரபரப்பு தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி நகரச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு 87 வயது ஆகிறது. ராஜேஸ்வரிக்கு சொந்தமாக வீடுகளும், பல கடைகளும் உள்ளது. கடந்த 11-ஆம் தேதி தலையில் ரத்தம் வடிந்து மயங்கி கிடந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் ராஜேஸ்வரியின் எதிர் வீட்டில் வசிக்கும் சுப்ரியா(20) என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

   

சுப்ரியாவுக்கு திருமணமாகி பிறந்து 4 மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. இவர் ராஜேஸ்வரியிடம் சென்று 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக கேட்டுள்ளார். ஆனால்  மூதாட்டி கடன் தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சுப்ரியா அவரை கீழே தள்ளிவிட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது. அவரைப் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.