மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாவில் பெண்களுடைய கல்லறைகளை தோண்டி அவர்களின் உடல்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து இது மனித குலத்தையே அவமானப்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மதச் சடங்குகளை செய்வதற்கு வந்த போது கல்லறையில் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதேபோல மற்றொரு புதிய கல்லறையும் இதே போல இருந்ததை கண்டறிந்துள்ளார்கள். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இது குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. இரண்டு இளைஞர்கள் முழு நிர்வாணமாக ஒரு கல்லறை நோக்கி நடந்து செல்கிறார்கள். சிசிடிவி கேமராவை கண்டதும் கல்லறையில் இருந்து ஒரு துணியை தூக்கி அதை மூடுகிறார். இது குறித்த விசாரணையில்அயூப் கான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடுமையான விசாரணைக்கு பிறகு அவர் சடலங்களை அவமதித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, மே 20 ஆம் தேதி அமாவாசை அன்று, பிரதான கல்லறை உட்பட இரண்டு கல்லறைகளில் ஆறு கல்லறைகள் திறந்திருந்தன. இது தாந்த்ரீக சடங்குகளின் ஒரு பகுதியாக செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. அனைத்து கல்லறைகளும் சுமார் 50 வயதுடைய பெண்களுடையவை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். கல்லறைகள் கால் முனையிலிருந்து திறக்கப்பட்டிருந்தன, மேலும் உடல்களை மூடியிருந்த கவசங்களும் சிதைக்கப்பட்டிருந்தன.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…