உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவியை ஒரு நடுத்தர வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 8 ஆம் தேதி மாலை 5:15 மணிக்கு நகரின் முகல்புரா பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
उत्तर प्रदेश के मुरादाबाद जिले में मनचले का आतंक. मुगलपुरा थाना क्षेत्र में 8वीं कक्षा में पढ़ने वाली एक छात्रा से अधेड़ व्यक्ति ने छेड़खानी की. मनचले व्यक्ति की शर्मनाक हरकत सीसीटीवी में हुई कैद. पुलिस सीसीटीवी फुटेज के आधार पर आरोपी की तलाश में जुटी…#Uttarpradesh #Moradabad… pic.twitter.com/7u5h3AcVqc
— Nedrick News (@nedricknews) November 17, 2025
குற்றம் சாட்டப்பட்டவர் நாக்பானி பகுதியில் உள்ள நவாப்புராவைச் சேர்ந்த 43 வயதான இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இப்ராஹிம் அவளை ஒரு மூலையில் தள்ளி, தனது சைக்கிளுக்கும் சுவருக்கும் இடையில் மாட்டி, தகாத முறையில் தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமி சத்தம் போட்டு உதவி கேட்டு கத்தியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சைக்கிளில் வேகமாக ஓடிவிட்டார். பின்பு சிறுமி வீட்டிற்கு வந்ததும், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையை விவரித்தார். குடும்பத்தினர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடினர், ஆனால் அவர் ஏற்கனவே தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்டவரின் தந்தை பின்னர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் விசாரணையாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
