கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் திருமணம் ஆன பூர்ணிமா என்ற 36 வயது பெண் கணவரை பிரிந்து மைசூரில் கிருஷ்ணமூர்த்தி புரத்தில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோல அந்த கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற 26 வயது இளைஞர் ஆசிரியை பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். அன்று முதல் அவர் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறிய நிலையில் பூர்ணிமா காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் அபிஷேக் அவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தன்னை விட வயது குறைவு என்று கூறி பூர்ணிமா காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அபிஷேக் தன்னை காதலிக்க மறுக்கும் பூர்ணிமா வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று அவரை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் மாலை பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன்னை காதலிக்கும்படி கூறி தகராறு செய்த நிலையில் பூர்ணிமா காதலிக்க முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.
இதனால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அபிஷேக் பூர்ணிமாவின் வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு அவரே பூர்ணிமாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மருத்துவமனையில் பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…