கேரள மாநிலம் கம்பவள்ளிகூடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் புதுப்பாரியாரம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் கவலையுடன் வீட்டிற்கு நடந்து சென்ற போது எஸ்டேட் சந்திப்பு அருகே தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வருவதை பார்த்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…