ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப் போலீசார் அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று திடீர் சோதனை செய்தனர். பாரின் பின்புறம் நின்ற கார், ஸ்கூட்டரை சோதனை செய்தபோது 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த மூன்று பேரைப் பிடிக்க முயன்றபோது இருவர் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உருவாடி பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் சிவக்குமார் (45) என்பது தெரியவந்தது.
விசாரணையில் கோபி டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், ரூ.95 ஆயிரம் பணம், கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிவகங்கை வெள்ளகுழி சிலம்பரசன், மதுரை மோசஸ் என்கிற மோகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…