இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் பயணிகள் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் விலை க்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது. உதாரணமாக அக்டோபர் 14ஆம் தேதி கடையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளீர்கள் என்ற வைத்துக் கொள்வோம். சில காரணங்களால் அந்த நாளில் பயணம் செய்யவில்லை என்றால் அக்டோபர் 25ஆம் தேதி டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக புதிய டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் மாற்றுவதற்கு கட்டணமும் கிடையாது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும் போது உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் பயண தேதியை ஆன்லைனில் மாற்றினால் பணம் கழிக்கப்படாது. தற்போதைய அமைப்பில் பயண தேதியை மாற்றுவதற்கான ஏற்பாடு இல்லை. டிக்கெட்டை ரத்து செய்து பயண தேதியை மாற்ற வேண்டும் என்றால் பணரீதியாக இழப்பு ஏற்படும். எனவே பயணிகளின் நலனுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
