கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், நடந்து சென்ற பெண்ணின் பையை மின்னல் வேகத்தில் பறித்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த அந்த நபர், ஒற்றைக் கையால் லாவகமாகப் பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
⚠️Breaking: Swagata Mukherjee and her sister Ishani Das were returning to Kolkata from Asansol. They boarded the Patna Duronto train at 2:00 AM from Asansol and reached Shalimar Station at 5:30 AM.
After exiting the station and booking a cab, they stood just across the road from… pic.twitter.com/ynOimpCCC8
— Aparajite (@amshilparaghu) March 30, 2026
“>
இதனால் பாதிக்கப்பட்ட பெண் நிலைதடுமாறி விழுந்த போதிலும், அந்த நபர் அங்கிருந்து வேகமாக மறைந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற சமூக விரோதச் செயல்களைத் தடுக்க ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
