உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல விதவிதமான விலங்குகள் இருந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரை எடுத்துக் கொள்ளலாம். அது காலப்போக்கில் அழிந்தே போய்விட்டது. அது போல தற்போதைய காலகட்டத்தில் கூட ஒரு சில விலங்குகளை அழிவின் விளிம்பில் இருப்பதாக கூட அறிவித்து அதை பாதுகாத்து வருகிறார்கள். தற்போது அதற்கும் மேலாக போய் உலக அளவில் இருக்கும் அனைத்து விலங்குகளும் ஒரு ஆபத்தை அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று சிட்னி பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியிருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.
உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்து இருப்பது சிட்னி பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் வெளிவந்து இருக்கிறது. இதனால் விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. உலக அளவில் கோடிக்கணக்கான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் இருக்கின்றன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறையும் போது இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
சிட்னி பல்கலைக்கழகம் விலங்குகளின் ரோமம் மலம் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆய்வு செய்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகளின் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 1985 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான காலத்தில் 28 வகையான தாவரங்கள் விலங்குகள் மற்றும் பறவைகளின் தன்மை குறித்த ஆய்வுகளும் செய்யப்பட்டது. இதற்கு முக்கிய உதாரணமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மரபணு பரவல் குறையும் போது புதிதாக உருவாகும் நோய்கள் வெப்ப அலை சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற எதிர்கால சவால்களை குறிப்பிட்ட விலங்குகளால் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மக்கள் இடமாற்றம், மனிதர்களால் உருவான காலநிலை மாற்றம் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களினால் இந்த ஆபத்துகளை தாங்க இயலாத விலங்குகள் எண்ணிக்கை குறைந்து ஒரு கட்டத்தில் அழிந்தே போய்விடும் என்று கூறுகிறார்கள். இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தும் வருகிறார்கள்.
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…