சமீப காலமாகவே உலக அளவில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ‘எல் நினோ’ (El Niño) காரணியானது, புவி வெப்பமயமாதலோடு இணைந்து உலகளாவிய காலநிலை அமைப்பில் பெரும் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அண்டார்டிகா பகுதியில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாகப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி, கடல் நீர்மட்டம் உயரும் அபாயம் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் எல் நினோவின் தீவிரத்தால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வழக்கத்திற்கு மாறான கடுமையான கோடை வெயிலும், இரவில் தாள முடியாத புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்புக்கு மாறான இந்தச் வெப்பநிலை உயர்வு வேளாண்மை, நிலத்தடி நீர்மட்டம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வியலில் பெரும் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில்தான், உலக வானிலை மையம் உலக நாடுகளுக்குப் மிகத் தீவிரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக, அதி தீவிர எல் நினோ நிகழ்வு வரும் 2027 பிப்ரவரி வரை 100 சதவீதம் நீடிக்கும் என்ற உறுதியான கணிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகின் சில பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவிலான கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் பெருவெள்ளமும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் இந்தத் தீவிரமான தாக்கம், நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் ஆயத்தப் பணிகளில் சர்வதேச அளவிலான உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…
செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக அரசியல் மற்றும் இணையதள தளங்களில்…