உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் ஆலை ஒன்றில் வெல்லப் பாகு காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து கொதித்துக் கொண்டிருந்த பெரிய கொப்பரைக்குள் டேனிஷ் விழுந்துள்ளார்.
இதில் அவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டுக் கொப்பரையில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து காட்சிகள் அனைத்தும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…