தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ .2,500 ஆக உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி இது தொடர்பாக வெளியிட்ட கருத்தில் இருந்தே இந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது பெண்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் இந்த மதிப்புமிகு மகளிர் திட்ட உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதற்கான முதற்கட்ட திட்டப் பணிகளிலும், பயனாளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணிகளிலும் அரசு அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
