தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது 60 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்களுக்கு மாதம் ₹2,500 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பெண்களுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது. இந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில், தற்போதுள்ள பயனாளிகளின் தரவுகளை மறுசீரமைத்து, தகுதியானவர்களின் எண்ணிக்கையை இறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
இப்புதிய திட்டத்திற்கான முழுமையான மறுசீரமைப்புப் பணிகளுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை இடைக்கால ஏற்பாடாக முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ₹1,000 உரிமைத் தொகை தடையின்றித் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதியான இல்லத்தரசிகளின் வங்கி கணக்குகளில் மே மாதத்திற்கான ₹1,000 நிலுவையின்றி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்த தகவல்கள் திட்ட வடிவமைப்பு முடிந்தவுடன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
