BREAKING: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

By Nanthini on ஆனி 4, 2026

Spread the love

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தற்போது மாநிலத்தில் சுமார் 63,000 பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வரும் நிலையில், இந்த அதிரடி உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, விடுபட்ட தகுதி வாய்ந்த புதிய பயனாளிகளையும் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.