BREAKING: ரேஷன் கார்டுக்கு பணம்… இரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்..!!

By Soundarya on வைகாசி 15, 2026

Spread the love

தமிழகத்தில் நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திட்டத்திற்கான தகுதி வரம்புகளில் புதிய அரசு ஏதேனும் மாற்றங்களைச் செய்துள்ளதா என்ற கேள்விகளும் விவாதங்களும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளன. இருப்பினும், தகுதிகள் மற்றும் விதிமுறைகளில் இதுவரை எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய நடைமுறைகளின்படியே தகுதியான பயனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான உதவித்தொகை நேரடியாகச் சென்றடையும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

   

அதன்படி, ஒரு ரேஷன் கார்டில் உள்ளவர்களில் தகுதியுடைய ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற விதிமுறை தொடர்ந்து நீடிக்கிறது. மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்ச ரூபாய்க்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற கட்டாய விதியும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதிகளின் அடிப்படையில் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.