போடு ரகிட ரகிட… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. காலையிலேயே CM விஜய் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கால அவகாசம் தேவை எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தைச் செம்மைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய திட்டத்தில் தகுதியற்ற சில பயனாளிகள் இணைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தகுதியானவர்களை மட்டும் கண்டறிந்து பயனாளிகள் பட்டியலை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் தவெக தனது கொள்கை முடிவாக அறிவித்த ₹2,500 உரிமைத் தொகையைத் தடையின்றி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் உண்மையான ஏழை எளிய பெண்கள் அதிகப்படியான நிதியுதவியைப் பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.