ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாலையோரமாக மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் தம்பதியினர் வருவதை கண்டு அவர்களை பின்தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென்று அந்த வாலிபர்கள் கணவரை தாக்கி விட்டு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அலறி அடித்துக் கொண்டு அந்த நான்கு பேரிடமும் இருந்து தப்பி ஓடி மக்கள் நடமாட்டம் இருந்த பகுதிக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய கணவரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் மூன்று பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…