அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் என்ற பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அங்குள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். தனது அன்றாட வாழ்க்கையைப் பற்றிய வீடியோக்களை “taylorinpakistan” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பாகிஸ்தானின் கிராமப்புற சூழல், பண்ணை நிலங்கள் மற்றும் அங்குள்ள சவாலான வாழ்க்கை முறையைக் காட்டியுள்ளார். தான் பாகிஸ்தானுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும், ஆனால் அங்குள்ள வாழ்க்கையை மிகவும் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சுமார் 8.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது தைரியத்தைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் அவர் அமெரிக்காவின் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு பாகிஸ்தான் கிராமப்புற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயனர், “அவர் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்குச் சென்றுவிட்டார்” என்று விமர்சித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரே, “ஏன் லாகூர் அல்லது இஸ்லாமாபாத் போன்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்காமல் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எது எப்படியிருந்தாலும், கலாச்சார மாற்றங்களையும் புதிய சூழலையும் ஏற்றுக்கொண்டு டெய்லர் வாழும் விதம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
