திருமணமான முதல் இரவிலேயே மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதுப்பெண் ஒருவர் விசித்திரமான மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குச் சென்ற மணமகனிடம், தனக்கு ₹90 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே முகத்திரையை விலக்குவேன் என்று அந்த பெண் நிபந்தனை விதித்துள்ளார். மேலும், கேட்கும் பணத்தைத் தராவிட்டால் மணமகனின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவதாகவும் அவர் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். புதுப்பெண்ணின் இந்த விசித்திரமான மிரட்டலால் ஒட்டுமொத்த குடும்பமும் கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்தது.
மிரட்டியபடி கேட்ட தொகையைத் தராததால் ஆத்திரமடைந்த மணமகள், வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு தனது தாய் வீட்டிற்குத் தப்பியோடினார். அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வராமல், மணமகளின் உறவினர்கள் திரண்டு வந்து மணமகனின் வீட்டை வெளிப்புறமாகப் பூட்டி சிறைவைத்தனர். அதன் பின்னரும் கேட்கப்பட்ட ₹90 லட்சம் பணம் தராததால், வீட்டின் உள்ளே இருந்த பிஎன்ஜி (PNG) எரிவாயு குழாயைத் துண்டித்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் வீட்டோடு உயிரோடு எரிக்க அவர்கள் கொடூரமான முறையில் முயற்சி செய்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் சிக்கிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், எப்படியோ சாதுரியமாகச் செயல்பட்டு அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் சம்பந்தப்பட்ட மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
