சென்னையில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி தடம் எண் 91 கொண்ட மாநகரப் பேருந்து வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் லக்ஷ்மனன் என்பவர் நடத்துனராகப் பணியில் இருந்தார். பேருந்து இரும்புலியூர் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கு ஒரு பெண் பயணி பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, அவர் பேருந்திற்குள்ளேயே மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு பதற்றமடையாத ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாக ஒரு சாதுரியமான முடிவை எடுத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்ற, பேருந்தை வழக்கமான பாதையிலிருந்து மாற்றி, அருகில் இருந்த தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு மிக வேகமாக ஓட்டிச் சென்றனர். மருத்துவமனையை அடைந்ததும், பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் உதவியோடு அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
சரியான நேரத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் எடுத்த இந்தத் துரித முடிவால், அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டது. இக்கட்டான சூழலில் மனிதாபிமானத்தோடு செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த நற்செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…