“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணனும் அவரது மனைவி சிந்துஜாவும் பாண்டித்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிந்துஜா சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பாண்டித்துரையின் முதுகு மற்றும் வயிற்றில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட வெளியேறிய பாண்டித்துரை, சாலையில் தடுமாறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

காவல்துறையினரின் விசாரணையில், ராஜேஷ் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சமயத்தில், பாண்டித்துரைக்கும் சிந்துஜாவிற்கும் இடையே திருமண மீறிய உறவு இருந்ததாக பாண்டித்துரையின் மனைவி நித்யா புகாரளித்துள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த கணவன் வீட்டில் இருக்கும்போதே பாண்டித்துரை அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் நகர் போலீசார், கணவன் ராஜேஷ் கண்ணன் மற்றும் மனைவி சிந்துஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.