பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் பணம் சம்பாதிப்பதற்காகக் குவைத் நாட்டிற்குச் சென்றார். கணவர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், அப்பெண்ணுக்கு ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சமீபத்தில் கணவர் குவைத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கணவனுக்கு உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில், மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு, வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கணவரைக் கொன்றுவிட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அந்தப் பெண் நாடகமாடினார். இருப்பினும், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரமும் கொலையின் பின்னணியும் அம்பலமானது. இதனையடுத்து மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…
ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 34 வயது பெண்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…
சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…