“என்னை மன்னித்து விடுங்கள்”… Youtube பார்த்து பெண் செய்த காரியம்… மொத்த வாழ்க்கையே அழிந்து போன சோகம்…!

By Srimathi on ஆவணி 17, 2025

Spread the love

சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (44),  மனைவி வனஜா (38). அருண் பெயிண்டிங் டிசைனராக வேலை செய்து வருகிறார். வனஜா, யூடியூப் பார்த்து ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதிக பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆப் மூலம் 2.5 லட்சம் கடன் பெற்று, ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்துள்ளார். ஆனால் இப்பொழுது எந்த வகையான லாபமும் கிடைக்கவில்லை, அவர் செலுத்திய பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என தெரிகிறது.

கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வனஜா, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வனஜாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வனஜாவின் கைபேசியை ஆய்வு செய்த போலீசார், வனஜா தற்கொலைக்கு முன் 3 ஆடியோக்களை பதிவிட்டுள்ளார், என தெரியவந்தது. இதில் “தனியார் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? என்னை மன்னித்து விடுங்கள்” என வனஜா பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.