இனிமே யாராவது இப்படி பண்ணுவீங்க?.. கெட்டுப்போன கேக்கை விற்ற பேக்கரி உரிமையாளர்.. தக்க பதிலடி கொடுத்த வாடிக்கையாளர்..!

Spread the love

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பஸ் நிலையம் பகுதியில் குணசேகரன் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகின்றார். அவருடைய மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வந்துள்ளார். அந்த பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கெட்டுப்போன கேட்க எதற்காக விற்பனை செய்தீர்கள் என கேட்பதும் அந்த கேக்கை நீங்களே சாப்பிடுங்கள் என்று அந்த பெண் தனலட்சுமிக்கு ஊட்ட முற்படுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு அவர் ஆசை ஆசையாக கேக் வாங்கிச் சென்ற நிலையில் அதனை வெட்டி அனைவரும் சாப்பிட ஒரு கட்டத்தில் அது கெட்டுப் போன கேக் என்று தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கேக்கை அப்படியே பேக்கரிக்கு கொண்டு வந்து என்னுடைய பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், ஆசையாக இந்த கேக்க நான் அவனுக்கு ஊட்டி விட்டேன் இந்தா நீயும் சாப்பிடு என்று உரிமையாளர் வாயில் திணிக்கிறார். எதுக்கு கெட்டுப்போன கேட்க வித்திங்க என்று கேட்டு ஆவேசமாக பேசுகின்றார். இதனைத் தொடர்ந்து பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு பொருள்களுக்கான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பேக்கரிக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

5 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago