உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனிஷா சிங். இவர் கடந்த 2023 ஆம் வருடம் குந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் திடீரென்று பிரச்சனை வந்துள்ளது. அதாவது தன்னுடைய மனைவி மனிஷாவிடம் கணவர் குந்தன் மஹிந்திரா கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். வரதட்சணையாக தன்னுடைய மனைவியிடம் கார் கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனிஷா தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு நான்கு நாட்கள் முன்பாக தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு கணவன் சென்று நிலையில் அந்த பெண் கணவருடன் செல்ல மறுத்துள்ளார்.
இதனால் விவகாரத்து செய்வது குறித்து பேசி இருக்கிறார் குந்தன். ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த மனிஷாவிற்கு இது கூடுதலாக கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மனமுடைந்து போன மனிஷா தன்னுடைய உடல் முழுவதுமாக தற்கொலை குறிப்பை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…