கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் யசோதா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருக்கும் யசோதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக கள்ள காதலை தொடர்ந்து வந்த நிலையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தனர். இதனை தொடர்ந்து யசோதா தன்னுடைய தோழியான பிரியங்கா என்பவரை விஸ்வநாத்திற்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு பிரியங்காவும் விஸ்வநாத்தும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி யசோதாவுக்கு தெரியாமல் பேசி வந்துள்ளனர்.
பிறகு இது கள்ளக்காதலாக மாறியதால் விஸ்வநாத் யசோதாவிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த யசோதா தன்னுடைய தோழி பிரியங்கா மற்றும் விஸ்வநாத் நடவடிக்கைகளை கவனித்து பிரியங்காவின் நட்பை கைவிட வேண்டும் என கள்ளக்காதலனிடம் கூறி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் விஷ்வநாத் மற்றும் பிரியங்கா இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இதனை அறிந்த யசோதா அந்த ஹோட்டலுக்கு சென்று இருவரிடமும் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த யசோதா இருவரையும் விடுதியில் வைத்து தாக்கியுள்ளார்.
பிறகு அருகில் இருந்த மற்றொரு அழைக்கச் சென்று கதவை உள்பக்கமாக போட்டிய யசோதா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யசோதாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
