சட்டம் எல்லாருக்கும் சமம்தா..! ஹெல்மெட் எங்கே மேடம்..? என் தம்பிக்கு ₹6,000 ஃபைன்.. அப்போ உங்களுக்கு..? பெண் போலீஸை வறுத்தெடுத்த வாலிபர்…!

By Swetha on வைகாசி 29, 2026

Spread the love

பீகாரின் மதுபனி பகுதியில் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற ஒரு நபர், அந்த பெண் அதிகாரியைத் தன் மொபைலில் வீடியோ எடுத்ததோடு, “என் சகோதரனுக்கு ஹெல்மெட் அணியாததற்காக 6,000 ரூபாய் அபராதம் விதித்தீர்கள், இப்போது இந்த அதிகாரிக்கு யார் அபராதம் விதிப்பது?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவில், அந்த நபர் பெண் எஸ்பியை பின்தொடர்ந்து சென்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உரக்கக் கூறுகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, உடனடியாக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, தன் தவறை மறைப்பதற்காக அங்கிருந்த ஒருவரிடமிருந்து ஹெல்மெட்டை வாங்கி அணிந்து கொள்ள முயற்சிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

   

சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய உயர் அதிகாரியே விதிமுறைகளை மீறியதும், அதை ஒரு சாமானிய மனிதன் தைரியமாக தட்டிக்கேட்டதும் இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது காவல்துறை நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கும் உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.