தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று விஜய் கூறி வந்த நிலையில் தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி மரண அடி வாங்கியதால் நாமும் தனித்து போட்டி இட்டால் படுதோல்வி அடைவோமா என்று விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
