காலையிலேயே அதிர்ச்சி… 1000 தனியார் பள்ளிகளின் NOC ரத்து?… அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு…!

By SATHISH R on ஆனி 26, 2026

Spread the love

தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக, மாவட்ட அளவிலான அதிகாரிகள் சுமார் ₹25,000 முதல் ₹50,000 வரை லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், முறைகேடாக வழங்கப்பட்ட 1000 பள்ளிகளின் NOC திரும்பப் பெறப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கவனத்திற்குச் சென்றுள்ளதை அடுத்து, லஞ்சப் புகாருக்குள்ளான பள்ளிகளின் சான்றிதழ்களை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

   

ஒருவேளை இந்த NOC திரும்பப் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட தகுதி மற்றும் கடுமையான விதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.