கவர்னர் பதவிக்கு காய்நகர்த்தி பாஜக மூத்த தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் நாகலாந்து கவர்னர் பதவிகள் காலியாவதால் அவற்றில் ஒன்றை மீண்டும் தமிழர்களுக்கு ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எச் ராஜாவின் பெயர் ரேசில் முந்துவதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரும் முயற்சி செய்கின்றனர். டெல்லி செல்வதற்கு முன்பு இது மகிழ்ச்சியான பயணம் என்று தமிழிசை கூறிச் சென்ற நிலையில் மீண்டும் அவர் கவர்னர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
