நிஜமாகவே ‘அம்மா’வின் அரசியல் வாரிசு சசிகலாவா?… இன்று வெளியாகிறது அந்த அதிரடிப் பெயர்… தமிழகமே திரும்பிப்பார்க்கும் அந்த ஒரு சம்பவம்….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

பிப்ரவரி 24-ம் தேதி அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தி அரசியலில் மீண்டும் அதிரடியாக களம் இறங்கியுள்ள சசிகலா, இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவின் மீதான தனது பிடியை உறுதி செய்யும் வகையில், அவர் அறிவிக்கப்போகும் புதிய கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அதிமுக’ என்ற பெயரையே பல்வேறு அடைமொழிகளுடன் சூட்டுவாரா அல்லது முற்றிலும் புதிய பெயரில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ அல்லது ‘ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்; இருப்பினும், சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.