தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. இந்த நகர்வை மக்கள் அளித்த தீர்ப்பிற்கு எதிரான துரோகமாக கருதும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஒருவேளை திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினால், தனது கட்சியின் 108 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி, தங்களை உண்மையான மக்கள் சக்தியாக நிலைநிறுத்திக்கொள்ளும் ஒரு வியூகமாகவே தவெக இந்த ராஜினாமா அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டால், பதவி முக்கியமல்ல கொள்கையே முக்கியம் என்பதை பறைசாற்ற தவெக திட்டமிட்டுள்ளதால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
