மத்திய பிரதேசம் மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 65 வயதான சூர்ஜியா பாய் ஜாதவ் என்ற மூதாட்டி உயிர் பிழைப்பதற்காக காட்டு நரியுடன் நேருக்கு நேர் மோதி சுமார் 30 நிமிடம் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருகாதி கிராமத்தை சேர்ந்த அந்த மூதாட்டி கடந்த திங்கட்கிழமை கால்நடைகளுக்கு புல்வெட்டி சென்றபோது பாலம் அருகே திடீரென்று ஒரு காட்டுனரி அவரை தாக்கியுள்ளது. அந்த தாக்குதலில் அவர் கால்களில் கடிபட்டது. அவர் கூச்சலிட்ட போதும் அந்த சமயத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மூதாட்டி தைரியமாக நரியின் வாயை கைகளால் இருக்க பிடித்துள்ளார்.
நரி மேலும் தாக்க முயன்ற போது அவர் அதன் மேல் அமர்ந்து தாடைகளைப் பிரித்து கட்டுப்படுத்தினார். பிறகு தன்னுடைய புடவையை கயிறு போல பயன்படுத்தி நரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு போராடிய தன் உயிரை காப்பாற்றிக்கொண்டார். உடனே தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் மயக்கம் அடைந்து ரத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமாக உள்ளதாக தெரிகிறது. மூதாட்டியின் உறுதியான மனநிலை மற்றும் தைரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…