“விஷம் கொடுத்தும் இவன் இன்னும் சாகல” கணவரை உயிரோடு எரித்து… மனைவி செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பினோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்வாடா கிராமத்தைச் சேர்ந்த விக்ராந்த் என்ற இளைஞரே இவ்வாறு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

விக்ராந்தின் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, மனைவியும் அந்த நபரும் இணைந்து விக்ராந்தைத் தாக்கத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, விக்ராந்த் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தீயால் எரிக்கப்பட்டுள்ளார்.

   

சம்பவ இடத்திலிருந்தவர்கள் விக்ராந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விக்ராந்தின் மனைவி மற்றும் அவருடன் தொடர்புடைய நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.